சரக்குச் சங்கிலி-11: லாரி டிரைவர்களை ஏன் திட்டறாங்க?
ரமேஷ் குமார் டில்லிலிருந்து வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்..... கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்..... ஞாபகம் இருக்க இந்த கதை? மறந்து போயிருக்க சான்ஸ். பரவாயில்லை. இங்கே ப்ரஷ் அப் பண்ணிக்கலாம்... க்ளிக் பண்ணுங்க இங்க... இதே கதைதான் அமெரிக்காவில் இப்போது. கோவிட் வந்ததில் இருந்து, சாமான் தட்டுப்பாடு. சீனாவிலிருந்து கப்பல் வரவில்லை. அப்படியே வந்தாலும், துறைமுகத்தில் நுழைய அனுமதி இல்லை. அப்படியே அனுமதி இருந்தாலும், கப்பலில் இருந்து கீழே இறக்கி வைக்க ஆள் இல்லை. அப்படியே இறக்கி வைக்க ஆள் இருந்தாலும், வெளியே கொண்டு போக லாரி இல்லை. அப்படியே லாரி இருந்தாலும், லாரி ஓட்ட டிரைவர் இல்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலமையில் முன்னேற்றம். கப்பல் வந்து, துறைமுகத்தில் நுழைய அனுமதி கிடைத்து, இறக்க ஆள், லாரி, டிரைவர் கிடைத்து, வேண்டிய சாமான்கள் கடைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஏதோ கொஞ்சம், கொஞ்சம். ஆனால், ஒரு புது ப்ராபளம் ... லாரிக்காரர்களை வசை பாடுகிறார்கள். சிம்பிளா சொ...